கோவை துடியலூரில் மத மோதல் அபாயம்: இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

கோவை துடியலூரில் பள்ளிவாசல் முன் தொழுகை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மத மோதல் அபாயம் குறித்து இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன. பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை துடியலூர் பகுதியில் மத மோதல் அபாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவில் கூறியுள்ள விவரங்கள்:

துடியலூர் சந்தை மைதானத்துக்கு பின்புறம் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது அருகிலுள்ள மாகாளியம்மன், மங்கையம்மன், பொன்னியம்மன், விநாயகர் கோயில்களிலும் விழாக்கள் நடைபெறும்.

விநாயகர் கோயில் முதல் மாகாளியம்மன் கோயில் வரையிலான பாதையில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. கடந்த ஒரு மாதமாக வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்று கூறி பள்ளிவாசல் முன்பு தொழுகை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.

பள்ளிவாசல் உள்ளே தொழுகை நடத்தினால் பிரச்னை இல்லை. ஆனால் வெளியில் தொழுகை நடத்துவதால் மற்ற மத மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை.

திருப்பூர் போன்று துடியலூர் பகுதிகளிலும் பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக சந்தேகம் உள்ளது. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வக்பு வாரியம் மூலம் சில இடங்களில் பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சரியான ஆதாரம் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் சொத்துகளை விற்கவோ, வாங்கவோ முடியாமல் தவிக்கின்றனர்.

துடியலூர், அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...