கோவை தெற்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் சிறப்பு தூய்மைப் பணி

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. குறிச்சி, கே.டி.எஸ். காலனி, ஆறுமுக மேஸ்திரி சந்து உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வார்டு எண் 85க்குட்பட்ட குறிச்சி, கே.டி.எஸ். காலனி, ஆறுமுக மேஸ்திரி சந்து ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.



இந்த பணியில் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், டெங்கு தடுப்பு பணிகள், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



குறிப்பாக, சில்வர் ஜூப்ளி வீதி, வெங்கடாசலபதி நகர், எம்.எம்.வி நகர், காந்திஜி பிரதான சாலை, ரங்கப்பனடி வீதி, முனியப்பன் கோவில் சந்து, விநாயகர் கோவில் வீதி, பொங்காளி அம்மன் கோவில் முதல் திருவள்ளுவர் சிலை வரையிலான பகுதிகள், அழகு நகர், பாரதி நகர் சந்திப்பு வரையிலான பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்றன.



மேலும், சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகளை அகற்றுதல், களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



இந்நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...