கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 206 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி விழாவில் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.



Coimbatore: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி 206 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.



இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயகர் கனகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...