கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 206 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி விழாவில் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.



Coimbatore: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி 206 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.



இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயகர் கனகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...