கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி தரையில் படுத்து உருண்டு போராட்டம்: பரபரப்பு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாணிக்கம் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார். ₹52,000 கூலி பாக்கி தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை அன்று ஒரு கூலித் தொழிலாளி தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்ற கட்டிட கூலி தொழிலாளி, தனக்கு சேர வேண்டிய ₹52,000 கூலி பாக்கி தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வந்திருந்தார்.

மாணிக்கம் அளித்த மனுவின் விவரம்: கோவை மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் வீட்டை புதுப்பிக்கும் பணிக்காக ₹57,000 ஒப்பந்தம் செய்யப்பட்டது. ₹5,000 முன்பணமாக பெற்றுக்கொண்ட மாணிக்கம், வேலை முடிந்த பிறகு மீதமுள்ள ₹52,000 தொகையை கேட்டபோது, வீட்டு உரிமையாளர் ராம்குமார் கொடுக்க மறுத்து ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார்.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணிக்கம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வந்தபோது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணிக்கத்தை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். மேலும், அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.



மாணிக்கம் தனது மனுவில், "எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக நான் கடினமாக உழைத்தேன். ஆனால் எனக்கு சேர வேண்டிய கூலியை பெற முடியவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட்டு, எனக்கு நீதி கிடைக்க உதவுமாறு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...