கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி தரையில் படுத்து உருண்டு போராட்டம்: பரபரப்பு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாணிக்கம் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார். ₹52,000 கூலி பாக்கி தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை அன்று ஒரு கூலித் தொழிலாளி தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்ற கட்டிட கூலி தொழிலாளி, தனக்கு சேர வேண்டிய ₹52,000 கூலி பாக்கி தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வந்திருந்தார்.

மாணிக்கம் அளித்த மனுவின் விவரம்: கோவை மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் வீட்டை புதுப்பிக்கும் பணிக்காக ₹57,000 ஒப்பந்தம் செய்யப்பட்டது. ₹5,000 முன்பணமாக பெற்றுக்கொண்ட மாணிக்கம், வேலை முடிந்த பிறகு மீதமுள்ள ₹52,000 தொகையை கேட்டபோது, வீட்டு உரிமையாளர் ராம்குமார் கொடுக்க மறுத்து ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார்.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணிக்கம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வந்தபோது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணிக்கத்தை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். மேலும், அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.



மாணிக்கம் தனது மனுவில், "எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக நான் கடினமாக உழைத்தேன். ஆனால் எனக்கு சேர வேண்டிய கூலியை பெற முடியவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட்டு, எனக்கு நீதி கிடைக்க உதவுமாறு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...