உடுமலை அருகே போலி பெண் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர் சுகுணா, உரிய கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒப்புக்கொண்டார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புதுப்பாளையம் வீர காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுகுணா என்ற ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர், தனது வீட்டில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அறையில், திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணன் மகாராஜன் முன்னிலையில் சுகுணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், உரிய கல்வித் தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை சுகுணா ஒப்புக் கொண்டார்.



இந்நிலையில், நேற்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் சுகுணா மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், உரிய தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...