உடுமலை அருகே போலி பெண் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர் சுகுணா, உரிய கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒப்புக்கொண்டார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புதுப்பாளையம் வீர காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுகுணா என்ற ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர், தனது வீட்டில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அறையில், திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணன் மகாராஜன் முன்னிலையில் சுகுணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், உரிய கல்வித் தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை சுகுணா ஒப்புக் கொண்டார்.



இந்நிலையில், நேற்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் சுகுணா மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், உரிய தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...