கோவையில் மிதமான மழை: குளிர்ச்சியான சூழலால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது. ஒன்றரை மாதங்களாக நிலவிய கடும் வெப்பத்திற்குப் பிறகு இந்த மழை பொதுமக்களுக்கு நிவாரணம் அளித்தது.



Coimbatore: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் இன்று காலை மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என முன்னதாக அறிவித்திருந்தது.

கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை புலியகுளம், உக்கடம், டவுன் ஹால், குனியமுத்தூர், பெரிய கடை வீதி, ராமநாதபுரம், கரும்புகடை, நஞ்சுண்டாபுரம், போத்தனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.



திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. பொதுமக்கள் குடை பிடித்தபடி தங்கள் அன்றாட பணிகளுக்குச் சென்றனர். சிறிது நேரம் பெய்த மழை பின்னர் நின்றுவிட்டது.

கடும் வெப்பத்திற்குப் பிறகு பெய்த இந்த மழை பொதுமக்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தின் வெப்பத்தை சமாளிக்க முடியும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...