கோவையில் மிதமான மழை: குளிர்ச்சியான சூழலால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது. ஒன்றரை மாதங்களாக நிலவிய கடும் வெப்பத்திற்குப் பிறகு இந்த மழை பொதுமக்களுக்கு நிவாரணம் அளித்தது.



Coimbatore: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் இன்று காலை மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என முன்னதாக அறிவித்திருந்தது.

கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை புலியகுளம், உக்கடம், டவுன் ஹால், குனியமுத்தூர், பெரிய கடை வீதி, ராமநாதபுரம், கரும்புகடை, நஞ்சுண்டாபுரம், போத்தனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.



திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. பொதுமக்கள் குடை பிடித்தபடி தங்கள் அன்றாட பணிகளுக்குச் சென்றனர். சிறிது நேரம் பெய்த மழை பின்னர் நின்றுவிட்டது.

கடும் வெப்பத்திற்குப் பிறகு பெய்த இந்த மழை பொதுமக்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தின் வெப்பத்தை சமாளிக்க முடியும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...