வாரம் ஒரு குளம்! கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று களப்பணியில் கோவை செங்குளம்!

கோவை மாவட்டம் தெற்கு, குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவித்துள்ளது. இதனை அகற்றும் களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நமது கோவை நமது பசுமை ஒருங்கிணைப்பில் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற களப்பணியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தை சுத்தம் செய்தனர். 

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசுகையில்; வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் உள்ள குளங்களை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து இந்த தூய்மை பணியினை மேற்கொண்டு வருகிறோம்.



அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவித்துள்ள நிலையில் அதனை அகற்றும் களப்பணியில் நாங்கள் ஒன்று சேர்ந்து இறங்கிவுள்ளோம். இந்த செங்குளம் 265 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் தண்ணீர் முழுமைய வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தற்போது இக்குளத்திற்க்கு தண்ணீர் வர 12.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது. 

அதிகமாக இந்த குளத்தில் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக உள்ளதால் அதனை சுத்தம் செய்து வருகிறோம். தற்போது 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைத்துள்ளோம். இதில் குழுக்களாக பிரிந்து குளத்தில் ஆங்காங்கே உள்ள கழிவுகளை அகற்றி வருகின்றோம். முக்கியமா இந்த குளத்தில் ஓரத்தில் வளரும் கலை செடியான நெய்வேலி காட்டாமணக்கு குளத்தில் உள்ள நீர்களை உறுஞ்சுகிறது. இதனால் குளத்தில் மண் திட்டுக்களும் உருவாகிறது.



இந்த மண் திட்டுக்களினால் குளத்தில் நீர்வரத்து குறைகிறது. எனவே, இந்த களப்பணியில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் அரசு அதிகாரிகளுக்கும் நாங்கள் செய்யும் இந்த பணியால் அவர்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோவையில் இதுபோன்ற குளங்களில் சுத்தம் செய்வதற்கு அரசு நிதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாங்கள் முன் வைத்துள்ளோம் என்றார்.



Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...