வாரம் ஒரு குளம்! கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று களப்பணியில் கோவை செங்குளம்!

கோவை மாவட்டம் தெற்கு, குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவித்துள்ளது. இதனை அகற்றும் களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நமது கோவை நமது பசுமை ஒருங்கிணைப்பில் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற களப்பணியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தை சுத்தம் செய்தனர். 

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசுகையில்; வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் உள்ள குளங்களை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து இந்த தூய்மை பணியினை மேற்கொண்டு வருகிறோம்.



அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவித்துள்ள நிலையில் அதனை அகற்றும் களப்பணியில் நாங்கள் ஒன்று சேர்ந்து இறங்கிவுள்ளோம். இந்த செங்குளம் 265 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் தண்ணீர் முழுமைய வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தற்போது இக்குளத்திற்க்கு தண்ணீர் வர 12.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது. 

அதிகமாக இந்த குளத்தில் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக உள்ளதால் அதனை சுத்தம் செய்து வருகிறோம். தற்போது 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைத்துள்ளோம். இதில் குழுக்களாக பிரிந்து குளத்தில் ஆங்காங்கே உள்ள கழிவுகளை அகற்றி வருகின்றோம். முக்கியமா இந்த குளத்தில் ஓரத்தில் வளரும் கலை செடியான நெய்வேலி காட்டாமணக்கு குளத்தில் உள்ள நீர்களை உறுஞ்சுகிறது. இதனால் குளத்தில் மண் திட்டுக்களும் உருவாகிறது.



இந்த மண் திட்டுக்களினால் குளத்தில் நீர்வரத்து குறைகிறது. எனவே, இந்த களப்பணியில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் அரசு அதிகாரிகளுக்கும் நாங்கள் செய்யும் இந்த பணியால் அவர்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோவையில் இதுபோன்ற குளங்களில் சுத்தம் செய்வதற்கு அரசு நிதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாங்கள் முன் வைத்துள்ளோம் என்றார்.



Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...