கோவை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் DDUGKY, RSETI, TNSDC ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ஜவுளி, உள்கட்டமைப்பு, விற்பனை, CNC இயக்குநர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்தவர்கள், தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, ITI பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்பு, புகைப்படம் மற்றும் பிற தகுதிச் சான்றுகளின் அசல் மற்றும் நகல்களுடன் வர வேண்டும்.

இந்த முகாமில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...