தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29, 2024 அன்று கொண்டாடப்பட்டது. வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன் செய் பொறியியல் துறையால் நிறுவப்பட்ட உணவுக்கழகத்தின் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஆண்டின் கருப்பொருள் "உணவு இழப்பு மற்றும் கழிவுகளைக் குறைப்பதற்கான கால நிலை நிதி" என்பதாகும். இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கணித்தல் போன்ற சவால்களை சமாளிக்க முதலீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.



விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா, சுவரொட்டி வழங்குதல், மீம் உருவாக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி, வேளாண்பொறியியல் முதன்மையர் முனைவர் A. ரவிராஜ், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் N. மரகதம், மற்றும் பேராசிரியர் முனைவர் M. பாலகிருஷ்ணன் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

உணவுப்பதப்படுத்துதல் துறைத்தலைவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உணவு இழப்பு மற்றும் கழிவுத்தடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழிப்புணர்வு பேரணியில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் தாக்கத்தை குறைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இந்த பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாணவர்களை ஊக்குவித்தது.

Newsletter

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...