தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29, 2024 அன்று கொண்டாடப்பட்டது. வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன் செய் பொறியியல் துறையால் நிறுவப்பட்ட உணவுக்கழகத்தின் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஆண்டின் கருப்பொருள் "உணவு இழப்பு மற்றும் கழிவுகளைக் குறைப்பதற்கான கால நிலை நிதி" என்பதாகும். இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கணித்தல் போன்ற சவால்களை சமாளிக்க முதலீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.



விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா, சுவரொட்டி வழங்குதல், மீம் உருவாக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி, வேளாண்பொறியியல் முதன்மையர் முனைவர் A. ரவிராஜ், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் N. மரகதம், மற்றும் பேராசிரியர் முனைவர் M. பாலகிருஷ்ணன் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

உணவுப்பதப்படுத்துதல் துறைத்தலைவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உணவு இழப்பு மற்றும் கழிவுத்தடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழிப்புணர்வு பேரணியில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் தாக்கத்தை குறைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இந்த பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாணவர்களை ஊக்குவித்தது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...