உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு, ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள காமராஜர் பவனில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு INTUC தலைவர் கோவை செல்வன் தலைமை வகித்தார். உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ.ரவி வரவேற்புரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் தென்னரசு உள்ளிட்டோர் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



இதையடுத்து உடுமலை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கும், பழைய பஸ் நிறுத்தத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும், ராஜேந்திரா சாலையில் உள்ள நேரு சிலைக்கும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் INTUC பொருளாளர் உத்தமராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், லோகநாதன், கிட்டுசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் உள்ளிட்ட INTUC தொழிற்சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...