உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு, ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள காமராஜர் பவனில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு INTUC தலைவர் கோவை செல்வன் தலைமை வகித்தார். உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ.ரவி வரவேற்புரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் தென்னரசு உள்ளிட்டோர் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



இதையடுத்து உடுமலை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கும், பழைய பஸ் நிறுத்தத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும், ராஜேந்திரா சாலையில் உள்ள நேரு சிலைக்கும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் INTUC பொருளாளர் உத்தமராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், லோகநாதன், கிட்டுசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் உள்ளிட்ட INTUC தொழிற்சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...