கோவை கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் கோவிலில் 15ஆம் ஆண்டு விழா கோலாகலம்

கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் கோவிலில் 15ஆம் ஆண்டு விழா மற்றும் மகாளய அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது. 51 குடும்பங்கள் பங்கேற்ற சிவ கலச மகா சிவ வேள்வி, திருக்கல்யாணம், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சிவா நகர் சிவாலயம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு விழா மற்றும் மகாளய அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 51 குடும்பத்தினர் கலந்து கொண்ட 51 சிவ கலச மகா சிவ வேள்வி நடைபெற்றது.

விழா நேற்று முதல் தேதி இடத்தூய்மை வழிபாட்டுடன் தொடங்கியது. வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை 5 மணி அளவில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதன் பின்னர் 51 சிவ கலச மகா சிவ வேள்வி நிகழ்ச்சி தொடங்கியது.



வேள்வியில் பங்கேற்ற 51 குடும்பத்தினர் அரிசி, நல்லெண்ணெய், வேள்வி பொருட்கள், பூமாலை, உதிரிப்பூக்கள், நெய், வஸ்திர வகைகள், அபிஷேக பொருட்கள், தேங்காய், பழ வகைகள், எலுமிச்சை பழம், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த பூஜைகளை பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சின்னவேடம்பட்டி இராமானந்த குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை முத்து சிவராம சுவாமி அடிகளார் ஆகியோர் நடத்தி வைத்தனர். பின்னர் அருள்மிகு மங்களநாயகி உடன்மர் மங்களீஸ்வரர் திருமேனிக்கு புனித நீராட்டு விழாவும், தொடர்ந்து ஆதிமங்கள விநாயகர், வீரவரத ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, திருச்சுற்று தெய்வங்களுக்கு புனித நீராட்டு விழாவும் நடைபெற்றது.

அதன் பின்னர் அலங்கார வழிபாடு, ஸ்ரீ மங்களாம்பிகை உடன்மர் மங்கலீஸ்வரர் பெருமான் திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றன. காலை முதல் மாலை வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு, பிரதோஷ வழிபாட்டு குழு, பௌர்ணமி மகளிர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கவுண்டம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...