உடுமலையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதான குழாய் உடைப்பு காரணமாக அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களுக்கு 10 வார்டுகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் குடிநீர் விநியோகத்தில் இரண்டு நாட்கள் தடை ஏற்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுமலை நகராட்சியின் முதல் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களில் நகரின் வார்டு எண் 12, 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் தடை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...