உடுமலையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதான குழாய் உடைப்பு காரணமாக அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களுக்கு 10 வார்டுகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் குடிநீர் விநியோகத்தில் இரண்டு நாட்கள் தடை ஏற்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுமலை நகராட்சியின் முதல் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களில் நகரின் வார்டு எண் 12, 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் தடை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...