மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடர்: திருப்பூர் நிறுவனம் அறிமுகம்

திருப்பூரில் ஒரு நிறுவனம் மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விஷவாயு தாக்குதல்களைத் தடுக்கவும், மனிதக் கழிவு அகற்றும் முறையை மாற்றவும் உதவும்.



திருப்பூர்: மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் விஷவாயு தாக்குதல்களால் தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றவும், திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனம் மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மைக் காலங்களில், மனிதக் கழிவுகளை அகற்றும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவங்களும், வீடுகளில் விஷவாயு பரவி பொதுமக்கள் இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

மேலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களால் எடுத்துச் செல்லப்படும் கழிவுகள் சில இடங்களில் திறந்த வெளியில் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினைகளைத் தீர்க்க, ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற திருப்பூர் நிறுவனம் ஒன்று மலக்கழிவுகளை நீராக மாற்றும் திறன் கொண்ட பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பவுடரை கழிவறையில் நீரில் கலந்து ஊற்றும்போது, அது நேரடியாக செப்டிக் டேங்கிற்குச் சென்று மலக்கழிவுகளை டைலூட் செய்துவிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.



செப்டிக் டேங்கில் உள்ள மலக்கழிவுகள் நீராக மாறிய பின்னர், அதனை விவசாய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சோக்பிட், செப்டிக் டேங்க் போன்ற இடங்களில் தேங்கியுள்ள கழிவுகளை இந்த பவுடரைக் கொண்டு மக்கச் செய்து நீராக மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியா பவுடர் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இந்த பவுடர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் காணொளிக் காட்சி மூலம் உ...

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...