கோவையில் கஞ்சா விற்ற மாணவர்கள் உட்பட 4 பேர் கைது: 220 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை குனியமுத்தூர் போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதில் இரண்டு மாணவர்களும் அடங்குவர். மொத்தம் 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று (செப்டம்பர் 29) மேற்கொண்ட ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதில் இரண்டு கல்லூரி மாணவர்களும் அடங்குவர். சம்பவம் குறித்த விவரம்:

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று (செப்.29) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கே.கே. நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாசில் (21), மற்றும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படிக்கும் 2 மாணவர்கள் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ஒரு எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று, எல்ஜி தோட்டம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்த கெம்பட்டி காலனியை சேர்ந்த பாலாஜி (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...