கோவையில் நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் செப்டம்பர் 30 அன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார். நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் செப்டம்பர் 30 அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

86வது வார்டில் உள்ள புல்லுக்காடு பகுதியில் சூயஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பொருட்களை ஆணையாளர் பார்வையிட்டார். DI 600mm, 300mm Slice வால்வு, Air வால்வு மற்றும் Butterfly வால்வு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.



48வது வார்டில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தின் புனரமைப்பு பணிகளையும் ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணி 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.



அதே பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



68வது வார்டில் உள்ள வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும் ஆணையாளர் பார்வையிட்டார். பழுதடைந்த கட்டடத்தை புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுப் பயணத்தில் உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், நடராஜன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...