கோவையில் நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் செப்டம்பர் 30 அன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார். நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் செப்டம்பர் 30 அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

86வது வார்டில் உள்ள புல்லுக்காடு பகுதியில் சூயஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பொருட்களை ஆணையாளர் பார்வையிட்டார். DI 600mm, 300mm Slice வால்வு, Air வால்வு மற்றும் Butterfly வால்வு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.



48வது வார்டில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தின் புனரமைப்பு பணிகளையும் ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணி 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.



அதே பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



68வது வார்டில் உள்ள வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும் ஆணையாளர் பார்வையிட்டார். பழுதடைந்த கட்டடத்தை புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுப் பயணத்தில் உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், நடராஜன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...