மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு: ஒரு நாள் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் கனமழையால் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ஒரு நாள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் சேதம் அடைந்ததால், இன்று ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி குன்னூர் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் மலை ரயில் பாதையில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



கடந்த இரண்டு நாட்களாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு கல்லார் மற்றும் குன்னூர் இடையே உள்ள வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள மலை ரயில் பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் பாதை சேதமடைந்துள்ளது.

கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று காலை தண்டவாளங்களை சரிபார்க்க சென்ற ரயில்வே ஊழியர்கள் ரோந்து பணியின் போது மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று குன்னூருக்கு காலை புறப்பட்டு சென்ற மலைரயில் கல்லார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இந்த தகவல் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சேதமடைந்த பெல் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிக்கு ரயில்வே ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...