மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு: ஒரு நாள் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் கனமழையால் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ஒரு நாள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் சேதம் அடைந்ததால், இன்று ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி குன்னூர் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் மலை ரயில் பாதையில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



கடந்த இரண்டு நாட்களாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு கல்லார் மற்றும் குன்னூர் இடையே உள்ள வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள மலை ரயில் பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் பாதை சேதமடைந்துள்ளது.

கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று காலை தண்டவாளங்களை சரிபார்க்க சென்ற ரயில்வே ஊழியர்கள் ரோந்து பணியின் போது மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று குன்னூருக்கு காலை புறப்பட்டு சென்ற மலைரயில் கல்லார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இந்த தகவல் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சேதமடைந்த பெல் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிக்கு ரயில்வே ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...