மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு: ஒரு நாள் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் கனமழையால் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ஒரு நாள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் சேதம் அடைந்ததால், இன்று ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி குன்னூர் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் மலை ரயில் பாதையில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



கடந்த இரண்டு நாட்களாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு கல்லார் மற்றும் குன்னூர் இடையே உள்ள வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள மலை ரயில் பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் பாதை சேதமடைந்துள்ளது.

கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று காலை தண்டவாளங்களை சரிபார்க்க சென்ற ரயில்வே ஊழியர்கள் ரோந்து பணியின் போது மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று குன்னூருக்கு காலை புறப்பட்டு சென்ற மலைரயில் கல்லார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இந்த தகவல் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சேதமடைந்த பெல் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிக்கு ரயில்வே ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...