வால்பாறையில் கத்தி, அருவாளுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது

வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த இவர்கள் மாணவரிடம் பணம், செல்போனை பறித்துள்ளனர்.



கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் வெற்றிவேல் (18) நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (19), ஆறுமுகம் (25), ஆனந்தராஜ் (19) ஆகிய மூவரும் குடிபோதையில் கத்தி, அருவாளுடன் சென்று மிரட்டி அவரைத் தாக்கி, கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.

இது குறித்து வெற்றிவேல் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர், மூவரையும் தேடிச் சென்றனர். முதலில் ஆறுமுகம் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், ஏ1 எதிரியான ஹரிஹரன் போலீசார் தேடி வருவதை அறிந்து தேயிலைத் தோட்டத்தில் ஓடினார்.



அப்போது கையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்து கிடந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைப்பற்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...