வால்பாறையில் கத்தி, அருவாளுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது

வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த இவர்கள் மாணவரிடம் பணம், செல்போனை பறித்துள்ளனர்.



கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் வெற்றிவேல் (18) நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (19), ஆறுமுகம் (25), ஆனந்தராஜ் (19) ஆகிய மூவரும் குடிபோதையில் கத்தி, அருவாளுடன் சென்று மிரட்டி அவரைத் தாக்கி, கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.

இது குறித்து வெற்றிவேல் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர், மூவரையும் தேடிச் சென்றனர். முதலில் ஆறுமுகம் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், ஏ1 எதிரியான ஹரிஹரன் போலீசார் தேடி வருவதை அறிந்து தேயிலைத் தோட்டத்தில் ஓடினார்.



அப்போது கையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்து கிடந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைப்பற்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...