கோவையில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஏற்பாடு

கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பதி துவக்கி வைத்தார். செப்டம்பர் 22 வரை நடைபெறும்.


கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சி புரூக்பீல்ட்ஸ் மாலில் நடைபெற்றது. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கண்காட்சியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, IAS அவர்கள் செப்டம்பர் 21 அன்று துவக்கி வைத்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி C.V ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் Dr. S. ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் Dr. S. அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் கண்காட்சி துவங்கியது.

கண்காட்சியில் இருதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்கும் வகையில் மாதிரி இருதயத்தின் உடற்கூறியல் இடம்பெற்றிருந்தது. இதயத்தில் ஸ்டென்ட் எவ்வாறு பொருத்தப்படும், இதயத்தில் உள்ள அடைப்புகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன என்பது தெளிவாக விளக்கப்பட்டது. பேஸ்மேக்கர் குறித்த காட்சியும் இடம்பெற்றிருந்தது.

குழந்தைகளுக்கான இருதயவியல், சிறப்பு இருதய அறுவை சிகிச்சைகள், எலெக்ட்ரோபிசியாலஜி, லேசர் கரோனரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி குறித்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்கள் காணொளிகளின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன. நேரடியாக CPR செயல்விளக்கமும் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்கள், இருதய நோய்களைத் தவிர்க்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இக்கண்காட்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...