பொள்ளாச்சியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை கொண்டாடிய திமுகவினர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திமுகவினர் சிறப்பு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.



கோவை: பழனி முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திமுகவினர் சிறப்பு அன்னதானம் வழங்கினர்.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



முதலில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



இந்த நிகழ்வு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



நிகழ்ச்சியில் கழக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பணப்பட்டி தினகரன், நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், திமுக செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் ஆறுபடை வீடு முருகன் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...