சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு அனுமதி: விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

கோவை சிங்காநல்லூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிங்காநல்லூர் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாலை வசதிகளை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இந்த மேம்பாலம் திருச்சி சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம், ராமநாதபுரம் பகுதியில் மேம்பாலம், மற்றும் சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்த உக்கடம் மேம்பாலம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...