கோவையில் சர்வதேச டாய்-சி மாநாடு துவக்கம்: மனம், உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சி

கோவையில் நான்கு நாள் சர்வதேச டாய்-சி மாநாடு துவங்கியது. மனம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டிற்கான டாய்-சி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவையில் சர்வதேச அளவிலான டாய்-சி மாநாடு செப்டம்பர் 19 அன்று துவங்கியது. நித்திய குருகுலா அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் கிளப்பில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டின் துவக்க விழாவில், நித்திய குருகுலா மன நல ஆலோசணை மையம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கவுரவ அழைப்பாளர்களான திருமதி லட்சுமி நாராயணன் மற்றும் பை மெட்டல் பேரிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவசைலம் நாராயணன் ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மாநாட்டில் முக்கிய விருந்தினராக ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள டாய் சி ஆரோக்கிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பால் லாம் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், டாய்-சி கலையின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். உடல் ஆரோக்கியம் மேம்பட, உடல் நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட டாய்-சி எவ்வாறு உதவுகிறது என்பதை அவர் விளக்கினார்.

டாக்டர் பால் லாம், மனித வாழ்க்கையில் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனை அதிகரிக்க டாய்-சி கலை பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் நித்திய குருகுலா நிர்வாகிகளான பிரசாந்த் சந்திரன், நடாஷா சந்திரன், சுதா சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு டாய்-சி கலையின் பயன்பாடுகள், முறையான பயிற்சிகள், மற்றும் இக்கலை குறித்த முழுமையான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...