கோவையில் சர்வதேச டாய்-சி மாநாடு துவக்கம்: மனம், உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சி

கோவையில் நான்கு நாள் சர்வதேச டாய்-சி மாநாடு துவங்கியது. மனம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டிற்கான டாய்-சி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவையில் சர்வதேச அளவிலான டாய்-சி மாநாடு செப்டம்பர் 19 அன்று துவங்கியது. நித்திய குருகுலா அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் கிளப்பில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டின் துவக்க விழாவில், நித்திய குருகுலா மன நல ஆலோசணை மையம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கவுரவ அழைப்பாளர்களான திருமதி லட்சுமி நாராயணன் மற்றும் பை மெட்டல் பேரிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவசைலம் நாராயணன் ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மாநாட்டில் முக்கிய விருந்தினராக ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள டாய் சி ஆரோக்கிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பால் லாம் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், டாய்-சி கலையின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். உடல் ஆரோக்கியம் மேம்பட, உடல் நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட டாய்-சி எவ்வாறு உதவுகிறது என்பதை அவர் விளக்கினார்.

டாக்டர் பால் லாம், மனித வாழ்க்கையில் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனை அதிகரிக்க டாய்-சி கலை பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் நித்திய குருகுலா நிர்வாகிகளான பிரசாந்த் சந்திரன், நடாஷா சந்திரன், சுதா சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு டாய்-சி கலையின் பயன்பாடுகள், முறையான பயிற்சிகள், மற்றும் இக்கலை குறித்த முழுமையான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...