கோவையில் சர்வதேச டாய்-சி மாநாடு துவக்கம்: மனம், உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சி

கோவையில் நான்கு நாள் சர்வதேச டாய்-சி மாநாடு துவங்கியது. மனம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டிற்கான டாய்-சி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவையில் சர்வதேச அளவிலான டாய்-சி மாநாடு செப்டம்பர் 19 அன்று துவங்கியது. நித்திய குருகுலா அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் கிளப்பில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டின் துவக்க விழாவில், நித்திய குருகுலா மன நல ஆலோசணை மையம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கவுரவ அழைப்பாளர்களான திருமதி லட்சுமி நாராயணன் மற்றும் பை மெட்டல் பேரிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவசைலம் நாராயணன் ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மாநாட்டில் முக்கிய விருந்தினராக ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள டாய் சி ஆரோக்கிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பால் லாம் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், டாய்-சி கலையின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். உடல் ஆரோக்கியம் மேம்பட, உடல் நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட டாய்-சி எவ்வாறு உதவுகிறது என்பதை அவர் விளக்கினார்.

டாக்டர் பால் லாம், மனித வாழ்க்கையில் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனை அதிகரிக்க டாய்-சி கலை பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் நித்திய குருகுலா நிர்வாகிகளான பிரசாந்த் சந்திரன், நடாஷா சந்திரன், சுதா சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு டாய்-சி கலையின் பயன்பாடுகள், முறையான பயிற்சிகள், மற்றும் இக்கலை குறித்த முழுமையான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...