பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முக கவசம் அணிய அறிவுறுத்தல்

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி தனலட்சுமி, நோய் தடுப்புத்துறை மருத்துவர் டாக்டர் சிந்துஜா மற்றும் செவிலியர் லாவண்யா ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் மாறுபட்ட கொரோனா, சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல், குரங்கு அம்மை, நிப்பா வைரஸ் போன்ற நோய்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



மேலும், கை சுகாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. செப்டம்பர் 17 முதல் நோயாளிகள் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுவதாகவும், அதன் முதல் நாளில் உரிய உறுதிமொழி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகள் வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நோயின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதிக காய்ச்சல், உடல் சோர்வு, பசியின்மை, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, கொசு வலை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...