உடுமலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். ஏரிப்பாளையத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் மங்களம் ரவியின் அறிவுறுத்தலின் பேரில், நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி, மாவட்டப் பொதுச் செயலாளர் வடுகநாதன், நகரப் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்காத்த அம்மன் கோவிலில் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி மற்றும் ஏரிப்பாளையம் பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...