உடுமலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். ஏரிப்பாளையத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் மங்களம் ரவியின் அறிவுறுத்தலின் பேரில், நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி, மாவட்டப் பொதுச் செயலாளர் வடுகநாதன், நகரப் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்காத்த அம்மன் கோவிலில் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி மற்றும் ஏரிப்பாளையம் பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...