உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி மனு

கோவையில் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அருகில் மாட்டிறைச்சி கடை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலின் காம்பவுண்ட் சுவற்றினை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாகவும், கோவிலின் அருகில் மாட்டிறைச்சி கடை அமைந்திருப்பது பக்தர்களுக்கு இடையூறாகவும், பெரும் மனவேதனையையும் அளிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி மாட்டிறைச்சி கடையினை அகற்றிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, தமிழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...