உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி மனு

கோவையில் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அருகில் மாட்டிறைச்சி கடை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலின் காம்பவுண்ட் சுவற்றினை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாகவும், கோவிலின் அருகில் மாட்டிறைச்சி கடை அமைந்திருப்பது பக்தர்களுக்கு இடையூறாகவும், பெரும் மனவேதனையையும் அளிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி மாட்டிறைச்சி கடையினை அகற்றிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, தமிழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...