உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி மனு

கோவையில் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அருகில் மாட்டிறைச்சி கடை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலின் காம்பவுண்ட் சுவற்றினை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாகவும், கோவிலின் அருகில் மாட்டிறைச்சி கடை அமைந்திருப்பது பக்தர்களுக்கு இடையூறாகவும், பெரும் மனவேதனையையும் அளிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி மாட்டிறைச்சி கடையினை அகற்றிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, தமிழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...