உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி மனு

கோவையில் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அருகில் மாட்டிறைச்சி கடை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலின் காம்பவுண்ட் சுவற்றினை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாகவும், கோவிலின் அருகில் மாட்டிறைச்சி கடை அமைந்திருப்பது பக்தர்களுக்கு இடையூறாகவும், பெரும் மனவேதனையையும் அளிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி மாட்டிறைச்சி கடையினை அகற்றிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, தமிழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...