கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றன

கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் கவுண்டம்பாளையம் அருகே உள்ள எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் இரவு-பகல் ஆட்டமாக இரண்டு நாட்கள் நடைபெற்றன. 16 அணிகள் பங்கேற்றன.



கோவை: கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றன. கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கே.என்.ஜி.புதூர் சாய் நகர் எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் கலை பொழுதுபோக்கு அமைப்பின் சார்பில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இரவு-பகல் ஆட்டமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து 16 தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை வகித்தார்.



140 அடி அகலம் கொண்ட டர்ஃப் கிரவுண்டில் சுற்றிலும் மற்றும் மேல் பகுதியிலும் வலை அமைக்கப்பட்டிருந்தது.



ஏழு ஓவர் கொண்ட இந்த மேட்ச்களில், பேட்டிங் செய்யும் அணி முதல் ஆறு ஓவருக்குள் டபுள் டமாக்கா என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு ஓவரில் ஒரு ரன்னுக்கு இரண்டு ரன்கள் என எடுத்துக் கொள்ள முடியும். ஒரு அணிக்கு ஒன்பது பேர் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ.30,000 பரிசுத் தொகையும் கோப்பையும், இரண்டாவது அணிக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் கோப்பையும், மூன்றாவது அணிக்கு ரூ.5,000 பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் மற்றும் சிறந்த பீல்டர் உள்ளிட்ட பல சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர். குரூப் எஸ்.ஆர்.மருதாச்சலம், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி பச்சைமுத்து, கற்பகம் ராஜ்சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...