வால்பாறையில் நாளை விநாயகர் சிலைகள் விசர்ஜனம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் நாளை விசர்ஜனம் செய்யப்படுகின்றன. ஊர்வலம் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை: வால்பாறையில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் நாளை (செப்டம்பர் 15) விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வால்பாறையில் 3 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு வார வழிபாட்டிற்கு பின் நாளை (செப்டம்பர் 15) மதியம் 12:00 மணிக்கு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றன.

வால்பாறை நகரில் முக்கிய வீதி வழியாக மதியம் 2:00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இந்த ஊர்வலம் மற்றும் விசர்ஜன நிகழ்வுகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளியூர் மற்றும் சோலையாறுடேம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பழைய வால்பாறை வழியாக இயக்கப்படும். சின்கோனா, முடீஸ், வெள்ளமலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அக்காமலை, கருமலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நடுமலை பழைய தொழிற்சாலையிலிருந்து இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...