வால்பாறையில் நாளை விநாயகர் சிலைகள் விசர்ஜனம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் நாளை விசர்ஜனம் செய்யப்படுகின்றன. ஊர்வலம் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை: வால்பாறையில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் நாளை (செப்டம்பர் 15) விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வால்பாறையில் 3 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு வார வழிபாட்டிற்கு பின் நாளை (செப்டம்பர் 15) மதியம் 12:00 மணிக்கு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றன.

வால்பாறை நகரில் முக்கிய வீதி வழியாக மதியம் 2:00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இந்த ஊர்வலம் மற்றும் விசர்ஜன நிகழ்வுகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளியூர் மற்றும் சோலையாறுடேம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பழைய வால்பாறை வழியாக இயக்கப்படும். சின்கோனா, முடீஸ், வெள்ளமலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அக்காமலை, கருமலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நடுமலை பழைய தொழிற்சாலையிலிருந்து இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...