ஓணம் பண்டிகைக்காக கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில் சேவை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 16 வரை இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை-மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06161) செப்டம்பர் 13 அன்று மாலை 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும். திரும்பும் வழியில், மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் (எண்: 06162) செப்டம்பர் 15 அன்று மாலை 6:45 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் காசர்கோடு, நிலேஸ்வர், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை-கண்ணூர் சிறப்பு ரயில் (எண்: 06163) செப்டம்பர் 14 அன்று இரவு 11:50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 1:30 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையத்தை வந்தடையும். திரும்பும் வழியில், கண்ணூர்-சென்னை சிறப்பு ரயில் (எண்: 06164) செப்டம்பர் 16 அன்று மாலை 3:45 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...