கோவையில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா: 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படுவதாகவும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் பாராட்டினார்.

மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருவது பெருமைக்குரியது என்றார். மேலும், ஆசிரியர்களை கௌரவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாநகராட்சி ஆணையாளரும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், மண்டலத் தலைவர்கள் K.A. தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மண்டல உதவி ஆணையர்கள் சந்தியா, செந்தில்குமரன், ஸ்ரீதேவி, மாநகர கல்வி அலுவலர் R. குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...