அன்னூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஓடியது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்தது. அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரியம்பாளையம் பகுதியில் இருந்து பிள்ளையப்பன்பாளையம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

முதலில் சிறிய அளவில் இருந்த உடைப்பு, பின்னர் தண்ணீர் அழுத்தத்தால் பெரிதாகி, சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீச்சி அடித்தது. இதன் காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி, சாலையோரங்களில் சென்று சாக்கடையில் கலந்து ஓடியது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தற்போது, குழாய் உடைப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...