அன்னூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஓடியது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்தது. அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரியம்பாளையம் பகுதியில் இருந்து பிள்ளையப்பன்பாளையம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

முதலில் சிறிய அளவில் இருந்த உடைப்பு, பின்னர் தண்ணீர் அழுத்தத்தால் பெரிதாகி, சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீச்சி அடித்தது. இதன் காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி, சாலையோரங்களில் சென்று சாக்கடையில் கலந்து ஓடியது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தற்போது, குழாய் உடைப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...