கோவை உக்கடம் மேம்பாலத்தின் சுங்கம் பைபாஸ் இணைப்பு ராம்ப்புகள் திங்கள்கிழமை திறப்பு

கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் M.K. Stalin கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.481.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 3.8 கிலோமீட்டர் நீள மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் சுங்கம் செல்வதற்கான ஏறு, இறங்குதளம் வாலாங்குளம் வழியே அமைக்கப்பட்டு வந்தது.



திறப்பு விழாவின் போது முழுமை அடையாமல் இருந்த இந்த இணைப்பு ராம்ப்புகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்திட திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது, சுங்கம் பைபாஸ் உடன் உக்கடம் மேம்பாலத்தை இணைக்கக்கூடிய ஏறுதளம், இறங்குதளத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ராம்ப்புகளில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய இணைப்பு ராம்ப்புகள் திறக்கப்படுவதால், உக்கடம் மேம்பாலத்தில் இருந்து சுங்கம் பைபாஸ் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...