கோவை உக்கடம் மேம்பாலத்தின் சுங்கம் பைபாஸ் இணைப்பு ராம்ப்புகள் திங்கள்கிழமை திறப்பு

கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் M.K. Stalin கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.481.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 3.8 கிலோமீட்டர் நீள மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் சுங்கம் செல்வதற்கான ஏறு, இறங்குதளம் வாலாங்குளம் வழியே அமைக்கப்பட்டு வந்தது.



திறப்பு விழாவின் போது முழுமை அடையாமல் இருந்த இந்த இணைப்பு ராம்ப்புகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்திட திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது, சுங்கம் பைபாஸ் உடன் உக்கடம் மேம்பாலத்தை இணைக்கக்கூடிய ஏறுதளம், இறங்குதளத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ராம்ப்புகளில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய இணைப்பு ராம்ப்புகள் திறக்கப்படுவதால், உக்கடம் மேம்பாலத்தில் இருந்து சுங்கம் பைபாஸ் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...