மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு பேரணி

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடி படையினரும் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, அன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.



மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் கோ-ஆபரேட்டிவ் காலனி பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.



சட்டம் ஒழுங்கு போலீசார், அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் போலீசார் இந்த பேரணியில் பங்கேற்றததுடன் சிறப்பு அதிரடி படையினர் கையில் துப்பாக்கி ஏந்தி பங்கேற்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...