மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு பேரணி

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடி படையினரும் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, அன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.



மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் கோ-ஆபரேட்டிவ் காலனி பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.



சட்டம் ஒழுங்கு போலீசார், அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் போலீசார் இந்த பேரணியில் பங்கேற்றததுடன் சிறப்பு அதிரடி படையினர் கையில் துப்பாக்கி ஏந்தி பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...