மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு பேரணி

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடி படையினரும் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, அன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.



மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் கோ-ஆபரேட்டிவ் காலனி பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.



சட்டம் ஒழுங்கு போலீசார், அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் போலீசார் இந்த பேரணியில் பங்கேற்றததுடன் சிறப்பு அதிரடி படையினர் கையில் துப்பாக்கி ஏந்தி பங்கேற்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...