திருப்பூரில் விநாயகர் சிலை வைக்க பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய நபர் கைது

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி நன்கொடைக்காக உணவக உரிமையாளரை மிரட்டி, கடையை சூறையாடிய நபர் கைது செய்யப்பட்டார். இந்து முன்னணி, குற்றவாளி தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று மறுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை வைப்பதற்காக பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இந்து முன்னணி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.



திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம், அபிராமி தியேட்டர் ரோடு, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி (52) என்பவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்ததாகக் கூறிய ராசுக்குட்டி மற்றும் சிலர் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூலிக்க வந்துள்ளனர். அப்போது கணபதி ரூ.550 நன்கொடை கொடுத்ததாகவும், அதற்கு ரசீது வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.



இதன் பின்னர், கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ராசுக்குட்டி மற்றும் நான்கு பேர் மது போதையில் கணபதியின் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் கணபதியிடம் ரூ.3,000 நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நன்கொடை கொடுத்துவிட்டதாக கணபதி கூறியதால், ஆத்திரமடைந்த கும்பல் கணபதியை தாக்க முயன்று உணவகத்தை சூறையாடியுள்ளது.

இது குறித்து கணபதி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்ததாகக் கூறப்பட்ட ராசுக்குட்டி (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அவர் இந்து முன்னணி பெயரை தவறாகப் பயன்படுத்துவதாகவும் இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து தாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே அந்நபர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...