திருப்பூரில் விநாயகர் சிலை வைக்க பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய நபர் கைது

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி நன்கொடைக்காக உணவக உரிமையாளரை மிரட்டி, கடையை சூறையாடிய நபர் கைது செய்யப்பட்டார். இந்து முன்னணி, குற்றவாளி தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று மறுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை வைப்பதற்காக பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இந்து முன்னணி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.



திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம், அபிராமி தியேட்டர் ரோடு, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி (52) என்பவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்ததாகக் கூறிய ராசுக்குட்டி மற்றும் சிலர் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூலிக்க வந்துள்ளனர். அப்போது கணபதி ரூ.550 நன்கொடை கொடுத்ததாகவும், அதற்கு ரசீது வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.



இதன் பின்னர், கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ராசுக்குட்டி மற்றும் நான்கு பேர் மது போதையில் கணபதியின் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் கணபதியிடம் ரூ.3,000 நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நன்கொடை கொடுத்துவிட்டதாக கணபதி கூறியதால், ஆத்திரமடைந்த கும்பல் கணபதியை தாக்க முயன்று உணவகத்தை சூறையாடியுள்ளது.

இது குறித்து கணபதி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்ததாகக் கூறப்பட்ட ராசுக்குட்டி (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அவர் இந்து முன்னணி பெயரை தவறாகப் பயன்படுத்துவதாகவும் இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து தாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே அந்நபர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...