கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 15,000 வேலை வாய்ப்புகள்

கோவையில் செப்டம்பர் 21-ஆம் தேதி தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 15,000 வேலை வாய்ப்புகள் உள்ளன.


கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாம் ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் நடைபெறும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இவை உற்பத்தி, ஜவுளி, பொறியியல், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவை. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 15,000 வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பள்ளிக் கல்வி முடித்தவர்கள், இளநிலை, முதுகலை பட்டதாரிகள், டிப்ளமோ பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பங்கேற்க வயது வரம்பு இல்லை என்றும், முன்பதிவு கட்டணம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது சுயவிவரம் (Bio-Data) மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு முகாமிலேயே நியமன ஆணை வழங்கப்படும்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து மேலும் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். வேலை தேடுபவர்கள் 0422-2642388 அல்லது 9499055937 என்ற எண்களிலும், வேலையளிப்போர் 9790199681 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...