கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் தங்க நகை திருடிய நபர் கைது

கோவை காந்திபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் தங்க நகை திருடிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டார். திருட்டு ஆகஸ்ட் 1 அன்று நடந்தது, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.


Coimbatore: கோவை காந்திபுரம் 100 அடி சாலை பகுதியில் நடந்த வீடு கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலை பகுதியைச் சேர்ந்த அருள் விமலன் (30) மற்றும் அவரது மனைவி பாண்டி மேகல்வா (29) ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 அன்று, பாண்டி வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். அவர் மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

இச்சம்பவம் குறித்து பாண்டி ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில், கணபதி ஜெயப்பிரகாஷ் நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (34) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் சந்தோஷ்குமாரை செப்டம்பர் 1 அன்று கைது செய்தனர். தற்போது அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...