கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் தங்க நகை திருடிய நபர் கைது

கோவை காந்திபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் தங்க நகை திருடிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டார். திருட்டு ஆகஸ்ட் 1 அன்று நடந்தது, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.


Coimbatore: கோவை காந்திபுரம் 100 அடி சாலை பகுதியில் நடந்த வீடு கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலை பகுதியைச் சேர்ந்த அருள் விமலன் (30) மற்றும் அவரது மனைவி பாண்டி மேகல்வா (29) ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 அன்று, பாண்டி வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். அவர் மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

இச்சம்பவம் குறித்து பாண்டி ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில், கணபதி ஜெயப்பிரகாஷ் நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (34) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் சந்தோஷ்குமாரை செப்டம்பர் 1 அன்று கைது செய்தனர். தற்போது அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...